Saturday, November 28, 2009

கடைசிவரை கண்ணாடி போடாமல்

கடைசிவரை க்ண்ணாடி போடாமல் இருக்கவிரும்புகிறீர்
களா அப்படியானால் தவறாமல் தினம் கரட் கிழங்கைப்
பச்சையாக உண்ணுங்கள்.

பால் வெண்ணை சாப்பிட் டால் நிறைய விட்டமின் ' ஏ '
கிடைக்கும். அதற்கு வசதி இல்லாதவர்களுக்கு கிடைத்த
வரப்பிரதாசம் கரட் கிழங்கு.நிரையக்கரட்ஜ சேர்த்துக்
கொண்டால் அதே அளவு விட்டமின் ' ஏ ' பெறமுடியும்.
கரட்டில் "காரடீன்" என்கின்றசிறப்புப்பொருள் இருக்கிறது
இதுவே விட்டமின் உண் டாவதற்குக்காரணமாக இருக்கி
றது அதனால் தொத்து நோய் வராமல் விரட்டுவது.

வயிற்றில் அமிலம் காரணமாகப் புளியேப்பம், பசி
மந்தம் ஏற்படுகிறதா அப்படியானால் கரட்டைத்துருவி
பச்சடி போட்டுச்சாப்பிடுங்கள் அது நிவாரணமாகும்.
கொளுப்பு காரணமாக உடல் பருமனைக்குறைக்க
பட்டினி இருந்தேன் அப்பிடியும் பலன் கிடைக்கவில்லை
யே என்ற கவலையா, கவலையை விடுங்கள் கரட்
பச்சடி அடிக்கடி சாப்பிட்டுவாருங்கள் நீங்கள் அதிச
யப்படும் விதம் இளைப்பீர்கள். கொளுப்பைக்குறைக்
கும் சக்தி கரட்டின் தனித்தன்மை.

கிருமிகளை நாசம் செய்யும் சக்தி கரட்டுக்கு உண்டு.
இரத்தக்குறைவு காரணமாக சோகை ஏற்பட்டால்
தொடர்ந்து தினம் கரட் சாப்பிட்டு வந்தால் புதிய
இரத்தம் ஊறி சோகை நோய் நீங்கும். புதிய இரத்
தத்தை உற்பத்தி செய்யும் சக்தி கரட்டுக்கு உண்டு.

சிறுநீர் சம்பந்த மான கோளாறுகளை நிவர்த்தி
செய்யும் ஆற்றல் கரட்டுக்கு இருக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கரட் சாப்பிட்டால்
நோய் கொஞ்சம் கட்டுப்படும்

தோலின் மென்மைக்கும், பாதுகாப்புக்கும் விளம்
பரப்படுத்தும் சோப்புகளை விட நீங்கள் கரட்டை
நம்பலாம். கரட் சருமத்தைப்பாதுகாத்து மென்மை
யாகவைத்திருக்கிறது.

கரட்டை பச்சை உணவாக உண்பதே சிறந்த பலனைக்
கொடுக்கும். நம் நாட்டுக்காய் கறிகளை விட விலை
மலிவாக கரட் நம் நாட்டில் கிடைப்பதால் அதை வாங்கி
உண்டு பயன்பெறுவோமாக.

Thursday, November 19, 2009

கீரையும் அதன் மருத்துவக்குணங்களும்

ஏழைகளின் சொத்து என்று சொல்லப்படும் கீரை
விலை மலிவான சாதாரணப்பொருட்களிலும்
நிறையப்பலன்கள் பெறமுடியும் என்பதற்கு ஓர்
எடுத்துக்காட்டாகும். சில முக்கியகீரைகளின்
பலன்கள் பின்வருமாறு:

அரைக்கீரை: தினமும் உண்ணக்கூடியகீரை
வகைகளில் இது முதன்மையானது. எல்லா
நோயாளிகளும் உண்ணக்கூடியது.கண் பார்
வைச்சிறப்பாகவைத்திருபதற்கு இந்தக்கீரை
பயன்படுகிறது.இரத்தநாளங்கள், ஜீரண உறுப்
புகளை நல்லநிலையில் பாதுகாப்பாகவைத்
திருக்க இது ஒரு சிறந்தகீரை. பிரசவமான
மகளிருக்கு உடனடியான் ஊட்டம் அளிக்கும்
வல்லமை இந்தக்கீரைக்கு இருக்கிறது.

மணத்தக்காளிக்கீரை: வாயில் ஏற்பட்ட புண்,
வயிற்றுப்புண் முதலியவற்றிக்கு கண்கண்ட
சஞ்சீவி என்று இக்கிரையைக்கூறுவார்கள்.
மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல்
வளம் பெருகும். அல்சர் என்கின்ற நோய்க்கு
அற்புத மருந்தாகும். வாரம் இரு முறை உண்
ணக்கூடியகீரைகளில் இதுவும் ஒன்று.

பசளைக்கீரை: மலச்சிக்கலை விரட்டுவதில்
வல்லது.ஆண்மையைப்பலப்படுத்தும் , குளிர்ச்
சிதரும் கீரைகளில் இதுவும் ஒன்று. ஆனால்
ஆஸ்துமா போன்றநொய் உள்ளவர்கள் இக்
கீரையைக்கோடை காலத்தில் மட்டுமே
உண்ணவும்.

வெந்தியக்கீரை: இதில் புரதம், தாதுக்கள்,
மற்றும் விட்டமின் சி முதலியன் அபரித
மாக இருக்கிறது.வாயுவைக்கண்டிக்கும்
கல்லீரலைச்சுறுசுறுப்பாக்கும். வாரம்
ஒருமுறை இக்கீரையை உண்டுவர
மூட்டுவலி,இடுப்புவலி போன்றவை
நீங்கும்.சிறுநீர்கோளாறு கிட்டவே வராது.

முளைக்கீரை: இக்கீரை எல்லா வயதினரும்
தினம் சாப்பிடக்கூடியது. பசி இல்லாதவற்கு
பசியைத்தூண்டக்கூடிய கீரை. காசநோயின்
போதுவரும் காச்சலைக்கட்டுப்படுத்தக்கூடியது.

அகத்திக்கீரை: இதில் வைட்டமின், இரும்புச்
சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்தது. விஷங்க
ளை முறிக்கும். கண் பார்வை சம்பந்தப்பட்ட
நரம்புகளுக்கு வலுவூட்டக்கூடியது. வயிற்றில்
உள்ளகிருமிகளைக் கொல்லக்கூடியது. ஆனால்
வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள் வயோதிகர்
உண்ணக்கூடாது. மாதத்தில் ஒரு முறை மட்டும்
உண்ணத்தக்கது.

கரிசலாங்கண்ணி கீரை: இக்கீரை முதுமைத்தோற்
றத்தைக்கட்டுப்படுத்தும். கண் பார்வை கூர்மை
யடையும்.பல் நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது.
இரைப்பையை வலுப்படுத்துவதில் சிறந்தது.

புளியாரைக்கீரை: காயகல்பத்திற்கு இணையானது
என வள்ளலாரால் பேசப்பட்டது. கபம், பித்தவாயுவை
கண்டிக்கும் ஆற்றல் பெற்றது. மூலநோய்க்கும் நாட்
பட்ட கிராணிக்கு இது மாமருந்தாகிறது.


Tuesday, November 17, 2009

எலுமிச்சம்பழத்தின் மருத்துவக்குணம்

குறைந்த விலையில் நிறைந்த பயன் தரக்கூடிய பழவகை
களில் ஈடு இணையற்றது எலுமிச்சம்பழம். வாகடத்தில்
இதை அரச கனி என்று கூறுவார்கள்.

இதன் மருத்துவப்பலன்களைப் பெரிய பட்டியில் இட்டே
கூறலாம். அவையாவன:

பித்தத்தைப்போக்கும். தலைவலியைத்தீர்க்கும், மலச்
சிக்கலைப்போக்கும், தொண்டைவலியைப்போக்கும்,
வாந்தியை நிறுத்தும், காலாராக்கிருமியை ஒழிக்கும்,
பல் நோய்களைக்குணப்படுத்தும், டான்சில் வராமல்
தடுக்கும்,விஷத்தைமுறிக்கும், தேள் கடிக்கு உதவும்,
வாய்ப்புண்ணை ஆற்றும்,மஞ்சள் காமாலையை நீக்
கும்,வீக்கத்தைக்குறைக்கும்,வாயுவை அகற்றும்,
பசியை உண்டாக்கும், விரல் சுற்றுக்கு நிவாரணமா
கும், யானைக்கால் வியாதியைக்குணப்படுத்தும்.

ஓட்டலில் அல்லது வெளிச்சாப்பாட்டுக்கடைகளில்
சாப்பிடுபவர்கள் சுத்தம் அற்ற, நன்றாக வேகாத
சமையலை உண்பதால் ஏற்படக்கூடிய வயிற்றுத்
தொல்லையில் இருந்து விடுபட இரண்டு எலுமிச்சம்பழச்
சாற்றுடன் நல்ல பெருங்காயத்தூள் கொஞ்சம், சிறிது
உப்பு சேர்த்து தினம் குடித்து வருவது பெரும் நன்மை
யைஅளிக்கும்.

அணுக்குண்டு சோதனைகள் நடத்துவதால் நீரிலும்
காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தைத்தடுக்
கும் ஆற்றல் எலுமிச்சம்பழத்தொலில் உள்ள
ப்யோபிளேன் என்ற சத்தில் இருக்கிறது. அதனால்
தினமும் எலுமிச்சம்பழம் சாப்பிடுபவர்கள் கதிரியக்
கத்தைத்தாங்கிக்கொண்டு தப்பி உயிர் வாழ முடியும்.

புற்று நோயாளர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்
படும் கதிரியக்கத்தீங்கை எலுமிச்சம்பழம் தடுகிறது.

விளையாட்டு, ஓட்டப்பந்தயம், கடுமையான வேலை,
இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்
சம்பழத்தை எடுத்து உடனடியாக கடித்துச்சாற்றையோ
அல்லது பழத்தைபிளிந்து சாற்றுடன் சர்க்கரை சேர்த்துக்
குடித்ததும் களைப்பு நீங்கி தெம்பு ஏற்படும்.

உண்ணாவிரதம் இருப்பவர்கள் அவர்களின் உண்ணா
விரதத்தை முடிக்க எலுமிச்சம்பழச்சாறு கொடுப்பதை
நீங்கள் அறிவீர்கள். இதற்குரிய காரணம் உண்ணா
விரதத்தை விட்டு மறுபடி உண்ணு முன் எலுமிச்சம்
பழச்சாற்றை அருந்தி அதன் பின்பு உண்டால்தான்
சீரணப்பிரச்சினைகள் தோன்றுவதைத்தடுக்கமுடியும்.

Sunday, November 8, 2009

பால் கோவா செய்யும் முறை

தேவையானப்பொருட்கள்.
டின் பால் (மில்க் மெயிட்) 1 டின் (500 கிராம்)
கெட்டித்தயிர். 125 கிராம்.
பால். 150 மில்லி லிற்றர்
நெய். 100 கிராம்

செய்யும் முறை:
ஒரு( non stick) ஒட்டாத பாத்திரத்தில் டின் பாலையும் தயிரையும்
ஒன்றாகப்போட்டு கட்டி இல்லாமல் நன்றாகக்கரைத்து வைத்துக்
கொள்ளவேண்டும்.பினபு அக்கலவையுடன் பாலையும் சேர்த்து
அடுப்பில் வைத்து கொதிக்கவிடவேண்டும். அடுப்பில் இருக்கும்
பாலில் ஒரு மரக் கரண்டியால் கை விடாமல் தொடர்ந்து கிண்டிக்
கொண்டே இருக்க வேண்டும். முதலில் பாத்திரத்தில் உள்ள கல
வை தண்ணியாகத்தான் இருக்கும். சிறிது நேரங்கழிந்ததும் கொஞ்
சம் கெட்டி ஆனவுடன் அரைவாசி நெய்யைச் சேர்த்து கிண்டவும்.
சிறிது நேரம் கழித்து பால்க்கோவா பதம் வருமுன்பு மீதியாக உள்ள
நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கை விடாமல் கிண்ட
வேண்டும். பால் கோவா நெய்யைக் கக்கும் பதம் வந்ததும் அடுப்பி
லிருந்து இறக்கிவிடவும். இப்போது சுவையானதும் மிருதுவானது
மான பால் கோவா ரெடியாகிவிடும்.

Saturday, October 31, 2009

அச்சுவலைச்சந்திப்பு பற்றியது

அன்பின் பதிவர்கள்,

இந்த அச்சு வலைச் சந்திப்பும் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. இந்தச் சுட்டிக்குச் சென்றால் அந்நேரடி ஒளிபரப்பினை திங்கள் 3 மணியிருந்து பார்க்கமுடியும் ( நேரடி ஒளிபரப்பு எண்டால் அப்பதான செய்ய முடியும் :))


இயலுமெனில் உங்கள் வலைகளிலும் இச்சுட்டியுடன் கூடிய நேரடி ஒளிபரப்பு விபரத்தை தெரிவித்துவிடுங்கள்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ. (Aka) கௌபாய்மது

[ தக்காளிச்சாதம் ]

தக்காளிச்சாதம் செய்யத்தேவையான பொருட்கள்.

ஆரிசி.-------- 100 கிராம்
தக்காளிப்பழம். 2 பெரியது
வெண்காயம். 1 பெரியது
பச்சைமிளகாய் . 2
கடுகு. கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு. அரை ஸ்பூன்
வெந்தயம். அரை ஸ்பூன்
சாம்பார் பொடி. அரை ஸ்பூன்

சாதத்தை உதிராக வடித்துக்கொள்ளவும்.வெண்கா
யத்தயும் மிளகாயையும் பொடிப்பொடியாக நறுக்கொள்
ளவும்.தக்காளிப்பழத்தையும் துண்டுகளாக நறுக்கி வைத்
துக்கொள்ளவும்.வெறும் இருப்புச்சட்டியில் வெந்தயத்தை
வறுத்து எடுத்துக்கொண்டு அம்மியில் உப்பு சேர்த்து பொடி
செய்து வைத்துக்கொள்ளவும்.

இருப்புச்சட்டியில் மூன்று ஸ்பூன் எண்ணை விட்டு கடுகு,
உளுத்தம்பருப்பு வறுத்துக்கொண்டு பொடிப்பொடியாக நறுக்
கி வைத்துள்ள வெண்காயம் , பச்சைமிளகாயையும் போட்டு
நன்றாக வதக்கவும். இவை வதங்கியதும் நறுக்கிவைத்துள்
ள தக்களிப்பழத்தைப் போட்டு அரை ஸ்பூன் சாம்பார் பொடியை
யும் சேர்த்து வதக்கவும். வதங்கியபின் முன்பே வடித்து வைத்
துள்ள சாதத்தில் கொட்டி வெந்தயப்பொடியையும் கொட்டி நன்றா
கக்கிளறவும். எல்லாம் ஒன்றுசேர்ந்துவிட்டால் இப்போது டெமே
டோ பாத் என்கின்ற தக்காளிச்சாதம் ரெடியாகிவிட்டது.

Friday, October 9, 2009

சீரகத்தின் மருத்துவக்குணம்

பலர் நினைப்பது போல் சீரகம் உணவில் வாசத்திற்
காக சேர்க்கப்படுவதில்லை. 25 ம்கும் மேற்பட்ட
நோய்களைத்தீர்க்க சீரகம் பயன்படுத்தப்படுகிறது.

சீரகத்தில் ஏழு வகைச்சீரகம் உண்டு. அவையாவன
நற்சீரகம், பெருஞ்சீரகம்,கருஞ்சீரகம், காட்டுச்சீரகம்,
பிலப்புச்சீரகம், நட்சத்திரச்சீரகம், செஞ்சீரகம் எனப்
படும்.

இதில் பெருஞ்சீரகமும் நற்சீரகமும் மட்டுமே
எங்கள் உணவுப் பதார்த்தங்களில் பயன்படுத்
தப்படுகின்றன.

முக்கியமாக கீழ் வருபனவற்றைச்சீரகம் குண
மாக்குகிறது.வாய் நாற்றத்தைப்போக்கும், வாய்ப்
புண் குணமகும், தொண்டைக்கட்டு நீங்கும்,
நாக்குத்தடிப்பு நீங்கும், வாய் ஊறல் நிவர்த்தி
யாகும், இருமல் குறையும்,மார்புவலி குறை
யும், மூச்சுத்திணறல் நீங்கும்,மலக்கட்டு எடுப
டும்,ஜீரணம் ஒழுங்காகும்,வயற்றுவலி நீங்கும்,
சூதக வலி நீங்கும், சீதா பேதி குணமாகும்,பல் வலி
குறையும், எலும்பு பலமடையும்,உடல் வறட்சியை
போக்கும், வியர்வை நாற்றத்தைப்போக்கும், வாந்தி
குமட்டலை நீக்கும்,பித்தமயக்கம், ஜுரம் தணியும்.

கருஞ்சீரகம் நீரழிவு நோயைக்கட்டுப்படுத்தும் மருந்
துகளில் சேர்க்கப்படுகிறது.

மூத்திர எரிச்சலுக்கும் குளிர்ச்சிக்கும் கீழ்கண்ட முறை
யில் இந்தக்குடிநீரை ஒவ்வொருநாளும் தயாரித்துக்
குடிக்கவும்.

நாலு லிட்டர் தண்ணீரை நன்றாகக்கொதிக்கவைத்து
வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வடிகட்டிஎடுத்த கொ
திநீரில் 50 கிராம் சீரகத்தைப்போட்டு மீண்டும் கொதிக்
கவைத்து இறக்கி வைத்துவிடவும். இந்த நீரையே குடி
நீராக எப்போதும் பயன்படுத்திவந்தால் மேலே சொல்
லிய பலன்களில் பலவற்றைப்பெறலாம்.

சிறப்பாக மூத்திர எரிச்சலையும் ஜீரணம் இன்மையை
யும் இந்தக்குடிநீர் பூர்ணமாகக் குணமாக்கும்.

100 கிராம் சீரகம் எடுத்துக்கொண்டால் அதில் கீழ்கண்
ட விகிதாசாரத்தில் சத்துக்கள் இருக்கின்றன.

புரதம். 18.7 கி
கொழுப்பு 15.0 கி
தாது உப்பு 5.8 கி
கார்போஹைரேட் 36.6 கி
சுண்ணாம்பு 511 மில்லி கிராம்
இரும்பு 310 மில்லிகிராம்
கரோட்டின் 522 மில்லிகிராம்
நையசின் 2.6 மில்லிகிராம்
விட்டமின் சி 3.0 மில்லிகிராம்.


சீரகம் எங்கள் சமையலில் பங்குபற்றினாலும்
இது ஒரு மருந்துச்சரக்கு என்பதைத்தெரிந்து
கொள்ளுங்கள்.


Wednesday, October 7, 2009

கருவேப்பிலைக்குழம்பு

கருவேப்பிலைக்குழம்பு செய்யத்தேவையானவை.
புளி ------ ஒரு எலுமிச்சம்பழம் அளவு.
வற்றல் மிளகாய். ---- 5 (அய்ந்து)
உளுத்தம்பருப்பு. 1 1/2 ஸ்பூன்(ஒன்றரை)
கடுகு. ------- அரை ஸ்பூன்
உப்பு. ---------- 1 1/2 ஸ்பூன்(ஒன்றரை)
பெருங்காயம். ---- ஒரு துண்டு
கருவேப்பிலை (உதிர்த்தது) -- 2 கரண்டி

செய்யும் முறை:

முதலில் இருப்புச்சட்டியில் சிறிது எண்ணை
சேர்த்து உளுத்தம்பருப்பு, வற்றல் மிளகாய்,
பெருங்காயத்தை வறுத்து எடுத்துக்கொண்டு
அவற்றுடன் புளி, உப்பு, கருவேப்பிலை (பச்சை
யாக) அம்மியில் வைத்து நன்றாகஅரைத்து
விழுதாக எடுத்து ,குழம்பாக ஜலம் விட்டுக்
கரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு
அடுப்பில்வைத்து பச்சை வாசனை போக கொதிக்
கவிடவும். கொதித்தபின்பு கடுகு பொரித்துக்
கொட்டி இறக்கிவைக்கவும். இப்போது கருவேப்
பிலைக் குழம்பு ரெடி.

Tuesday, October 6, 2009

கருவேப்பிலையின் மகத்துவம்

கருவேப்பிலை என்பது பதார்த்தங்களிலிருந்து
தூக்கி வீசுவதர்க்காகப் போடப்படுவதில்லை.கரு
வேப்பில்லையின் சத்து நம் உடலில் சேரவேண்
டும் என்பதர்காகவே எல்லப்பதார்த்தத்திலும்
போடுகிறார்கள் ஆகையால் தூக்கி எறியாது
சாப்பிடுங்கள்.

கருவேப்பிலையைச்சாப்பிட்டால் புரதம், இரும்
புச்சத்து, சுண்ணாம்புச்சத்து,பாஸ்பரஸ், கார்போ
ஹைட்ரேட், கொளுப்பு, விட்டமின் ஏ, விட்டமின்
சீ முத்லியன உடலில் சேர்கின்றன.

கருவேப்பிலை சாப்பிட்டால் கண் பார்வைக்கோ
ளாறு உங்களை அணுகாது. எலும்புகள் பலப்படும்
சோகை நோய் வரப்பயப்படும்.

ஊரில் தொற்று நோய்ப் பரவல் இருந்தாலும் கரு
வேப்பிலை சாப்பிட்டால் அது எம்மைத்தொற்றாது.
புண்கள் விரைவில் ஆற கருவேப்பிலை உதவுகிறது.
அதுவும் வாய்ப்புண் உள்ளவர்கள் கருவேப்பிலை
சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும்.

வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளைப்போக்கும்
குணம் கருவேப்பிலைக்குண்டு. மலச்சிக்கலைப்
போக்கும், ஜீரணசக்தியைக்கூட்டும், பேதியைக்
கட்டுப்படுத்தும். பித்தத்தைக்கட்டுப்படுத்தி வாந்தி
யைத்தடுத்து வயிற்றில் ஏற்படும் வயிற்று இரச்ச
லைத்தடுக்கும்

தலைமுடி கரு கருவென வளரவும் கண்களுக்கு
ஒளி தரவும், சுக்கிலம் (Sperm) விருத்தி அடைய
வும் கருவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்து உத
வி செய்கிறது

முகத்தில் ஏற்பட்ட அம்மைத்தளும்பை நீக்க
கருவேப்பிலை- ஒரு பிடி, கசகசா-- ஒருகரண்டி
கஸ்தூரிமஞ்சள்.--ஒரு துண்டு
இவைமூன்றையும் அம்மியில் வைத்து அரைத்து
அந்த விழுதை முகத்தில் தடவி( பற்றுப்போடுவது
போல்) 30 நிமிடம் ஊறியபின் குளிர்ந்த தண்ணீரி
னால் கழுவி விடுங்கள். இப்படி 15 நாட்கள் செய்து
வர தளும்புகள் மறைந்துவிடும்.

பசிஎடுக்கவிலலையா? சாப்பாடு செமியாமல்
கஷ்டப்படுகிறீர்களா, கருவேப்பிலையை வறுத்
து அதனுடன் மிளகு,சீரகம், சுக்கு சேர்த்து பொடி
செய்து கொண்டு உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்
து சாப்பிடுங்கள். பசி அசிரவேகத்தில் கிளர்த்து
எழும்பும் நீங்களும் கொண்டுவா கொண்டுவா
பசி தாங்கமுடியவில்லையே என்று கேட்பீர்கள்.

எள்ளோதரை என்கின்ற எள் சாதம்

எள் சாதம் செய்யத்தேவையான பொருட்கள்.
அரிசி. --------- 200 கிராம்
நல்லெண்ணை.--- 4 ஸ்பூன்
உழுத்தம்பருப்பு. -- 1 கரண்டி
வற்றல் மிளகாய். 4
எள். -----------1 கரண்டி
உப்பு. --------- அரை ஸ்பூன்
பெருங்காயம். --- சிறு துண்டு.

முதலில் எள்ளுப்பொடி செய்துகொள்ளவேண்டும்.
செய்முறை:-
இருப்புச்சட்டியில் எண்ணை சேர்க்காமல் முத
லில் எள்ளை வறுத்து தனியாக வைத்துக்கொள்ள
வும். பின்பு அந்த இருப்புச்சட்டியில் சிறிது எண்ணை
சேர்த்துக்கொண்டு உழுத்தம்பருப்பு, வற்றல் மிளகாய்,
பெருங்காயம் முதலியவற்றை வறுத்துக்கொள்ளவும்.
வறுத்தெடுத்த பொருட்களை எள் சேர்க்காமல் உப்பு
சேர்துக்கொண்டு அம்மியில் வைத்துப்பொடி செய்து
கொண்டபின்பு எள்ளையும் அதனுடன் சேர்த்து பொ
டிசெய்து கொள்ளவும்.

சாதத்தை உதிரிப்பதமாக வடித்துக்கொள்ளவும். பின்பு
அந்த சாதத்தில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணையை
ஊற்றி நன்கு உதிர்த்துக்கொண்டு எள்ளுப்பொடியைச்
சேர்த்துக்கொண்டு மிகுதி நல்லெண்ணையையும்
சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் கடைசியில்
கருவேப்பிலையச்சேர்த்துக்கொள்ளவும். இப்போது
எள் சாதம் தயாராகிவிட்டது.

Sunday, October 4, 2009

எள்ளின் மருத்துவக்குணம்

நீங்கள் உங்கள் உடல் பருமன் குறையவேண்டும் அதாவது
உடல் இளைக்கவேண்டும் என்றாலும் அல்லது மெலிந்த
உடல் பருக்கவேண்டும் என்றாலும் கீழ் கண்டமுறையில்
எள்ளைச்சாப்பிட்டால் நீங்கள் விரும்பிய பலனைப்பெறலாம்.

கலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காப்பி அல்லது
தேநீர் குடியாமல் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று
தண்ணீர் குடிக்கவேண்டும். (3) மூன்று மணி நேரம் வேறு
எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். இப்படிச்சாப்பிட்
டால் ஒரு மாதத்தில் பலன் தெரியும்.

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் (மூத்திரம்) கழிக்கும்
பழக்கத்தை நிற்ப்பாட்ட இரவில் வெண்முள்ளங்கியுடன்
எள் சேர்த்துச்சாப்பிடக்கொடுத்து வர அந்தப்பழக்கம் இல்
லாமல் போய்விடும்.

மூலநோயால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபடக்
கீழே சொல்லியபிரகாரம் எள் வைத்தியம் செய்தால் குண
மாகும்.
எள். ----------- 5 கிராம்
ஆட்டுப்பால். 5 கிராம்
சர்க்கரை. . 5 கிராம்

எள்ளை விழுதாக்கிக்கொண்டு அதனுடன்ஆட்டுப்பாலும்
சர்க்கரையும் சேர்த்து ஒன்றாகக்கரைத்து க் குடித்து வந்
தால் பலன் தெரியும்.

பற்க்கள் பலவீனமாக இருந்தால் அதை நிவர்த்தி செய்ய
தினமும் காலையில் ஒரு கைபிடி எள் சாப்பிட்டு வந்தால்
பற்க்களின் பலவீனம் நீங்கி பல் பலப்படும் அதனால் பற்க்
களின் வீழ்ச்சியைத்தடுத்து நிறுத்தலாம்.

தொழுநோய் குணமாக எள்ளைக்கீழ் கண்டமுறையில்
சாப்பிட்டு வரப்பலன் கிடைக்கும்

எள் ------- ------ 5 கிராம்
உப்பு ------------ 5 கிராம்
மிளகாய் ------ 5 கிராம்

மூன்றையும் லேசாக வறுத்து இடித்து பின் அதைச்சலித்து
எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

காலை மாலை இரு வேளையும் இரண்டு சிட்டிகை அளவு
பொடியை அரைத்தேக்கரண்டி பசு நெய்யில் குழைத்துச்
சாப்பிடவேண்டும். இப்படி 21 நாட்கள் உண்டு வந்தால் பலன்
தெரியும். மருந்து என்று சாப்பிடுங்காலங்களில் பாவற்காய்
சாப்பிடுவதைத்தவிர்க்கவேண்டும்.


Saturday, October 3, 2009

அவரையின் மருத்துவக்குணம்

கொடிவகைகாய்களில் சிறந்தது அவரைக்காயாகும்.
சிக்கனமானவிலையில் நிறைந்த ஊட்டச்சத்தை இந்த
அவரைக்காய் தருகிறது.

இதில் சுண்ணாம்புச்சத்து,இரும்புச்சத்து, புரதச்சத்து
மற்றும் சில விட்டமின் சத்துகளும் ஒரே இடத்தில்
கிடைக்கும் காய் அவரைக்காயாகும். இதில் பிஞ்சுக்
காயே சிறந்ததாகும்.மிகஎளிதில் செமிக்கக்கூடிய
காய்களில் அவரையும்ஒன்று. அதனால் பலவீனமான
குடல் உள்ளவர்களும்மத்தியான நேரத்திலும் இரவு
நேரத்திலும் இதை உண்ணலாம்.

வெண்மையான அவரைகாய் வாயுவையும் பித்தத்தை
யும் கண்டிக்கவல்லது. இது உள்ளுறுப்புகளின் அளர்ச்சி
யையும் எரிச்சலையும் போக்கும் தன்மை உள்ளது.இதை
உணவில் சேர்த்து உண்பதால் நீரழிவு நோய், பேதியாகும்
தொல்லை, அடிக்கடி தலைநோய் வருதல், ஜீரணம் சம்பந்
தப்பட்ட கோளாறு முதலியவற்றைக்கட்டுப்படுத்தும்
என்று வைத்தியநூல்கள் கூறுகின்றன.

அண்மைய ஆராச்சிகளின்படி இரத்தக்கொதிப்பைக் கட்
டுப்படுத்தும் சக்தி அவரைக்காய்க்கு உண்டு என்று கண்
டுபிடித்துள்ளார்கள்.

Friday, October 2, 2009

எலுமிச்சம்பழச்சாதம்

எலுமிச்சம்பழச்சாதம் செய்யத்தேவையான பொருட்கள்.

அரிசி. ------------------ 150 கிராம்
எலுமிச்சம்பழம்.---- ஒன்று (1)
கடுகு. ------------------ அரை ஸ்பூன்.
கடலைப்பருப்பு.----- அரை ஸ்பூன்.
உளுத்தம்ப்ருப்பு. --- அரை ஸ்பூன்
வெந்தயம். ----------- அரை ஸ்பூன்.
வற்றல் மிளகாய். -- ஆறு (6)
பெருங்காயம். சின்னத்துண்டு.
முந்திரிப்பருப்பு. ----- ஆறு (6)
உப்பு. --------------------- தேவையான அளவு
நல்லெண்ணை .------ தேவைக்கேற்ற அளவு


சாதத்தை உதிராக வடித்துக்கொள்ளவும். ஒரு அகன்ற
பாத்திரத்தில் உதிராக வடித்த சாதத்தைக் கொட்டி ஆற
வைக்கவும். அதன் மீது ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை
யும் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணை யையும் விட்டு நன்
றாகக்கிளறி ஆறவைக்கவும்.

ஒரு இருப்புச்சட்டியில் எண்ணை சேர்க்காமல் வெந்தயத்தை
வறுத்து எடுத்துக்கொண்டு. அதே சட்டியில் சிறிது எண்ணை
விட்டு இரண்டு வற்றல் மிளகாயை வறுத்து எடுத்துக்கொள்
ளவும். வறுத்தெடுத்த வெந்தயம், மிளகாயுடன் அளவான
உப்பும் சேர்த்து அம்மியில் பொடி செய்து சாதத்தில் தூவவும்.

இருப்புச்சட்டியில் சிறிது எண்ணை சேர்த்துக்கொண்டு சிறிது
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இரண்டாகக்கிள்ளிய
வற்றல் மிளகாய், முந்திரிப்பருப்பு மற்றும் பெருங்காயத்தை
யும் சேர்த்து வறுத்து எடுத்து சாதத்தில் கொட்டவும். எலுமிச்
சம்பழத்தைப்பிழிந்து சாறு எடுத்து அதையும் சாதத்தில் கொட்டி
கருவெப்பிலை யும் சேர்த்து நன்றாகக்கிளறி கொள்ளவும்.

எல்லாம்ஒன்றாகச் சேர்ந்த பின்பு வேறு பாத்திரத்தில் எடுத்து
வைத்துக்கொள்ளவும். இப்போது லெமன் ரைஸ் என்கின்ற
எலுமிச்சம்பழச்சாதம்ரெடியாகிவிட்டது.

Sunday, September 20, 2009

புளியோதரை என்னும் புளிச்சாதம் செய்யும் முறை

புளியோதரை செய்யும் முறை.

முதலில் வெந்தயப்பொடி செய்துவைத்துக்கொள்ளவும்.
செய்யும் முறை பின்வருமாறு.
வெந்தயம் .............. அரை ஸ்பூன்.
வற்றல் மிளகாய். .. மூன்று
உப்பு ..........தேவையான அளவு

ஒரு இருப்புச்சட்டியில் எண்ணை விடாமல் முதலில் வெந்தயத்தை
வறுத்துக்கொள்ளவும்.பின்பு அதே இருப்புச்சட்டியில் சிறிது எண்ணைவிட்டு
மூன்று வற்றல் மிளகாயை வறுத்துக்கொள்ளவும். அம்மியில்
வெந்தயம், வறுத்தெடுத்தமிளகாய் தேவையான அளவு ஸ்பூன் உப்பு சேர்த்து பொடியாக்கி
வைத்துக்கொள்ளவும்.


இப்போது புளிக்காச்சல் செய்து கொள்ளவேண்டும். செய்யும் முறை பின்வருமாறு.
தேவையான பொருட்கள்:
புளி ----ஒரு எலும்பிச்சம் பழம் அளவு.
உளுத்தம் பருப்பு ----- ஒரு ஸ்பூன்.,
கடலைப்பருப்பு-------ஒரு ஸ்பூன்,

வற்றல் மிளகாய்---- மூன்று,
கடுகு------கால் ஸ்பூன்,

பெருங்காயம் -- ---ஒரு சிறிய துண்டு.
உப்பு தேவையான அளவு

இப்போது புளியைக் கெட்டியாக கரைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு இருப்புச்சட்டியில்
அரைக்கரண்டி நல்லெண்ணை விட்டு எண்ணை காய்ந்ததும் கடுகு, கடலைபருப்பு,
உளுத்தம் பருப்பு , மிளகாய் வற்றல்மற்றும் பெருங்காயம் வறுத்துக்கொண்டு
தயாராக வைத்திருக்கும் கரைத்த புளியை இருப்புச்சட்டியில்கொட்டி கொதிக்கவிட
வேண்டும். கொதிக்க ஆரம்பித்த பின் முதலில் தயாரித்துவைத்திருக்கும்
வெந்தயப்பொடியில் அரை வாசிப்பொடியை கொதிக்கும் புளியில் போட்டு கொதிக்க
விடவும். தீயைக்குறைத்து சுமார் 20 தொடக்கம் 30 நிமிடங்கள் வரைகொதிக்க
வேண்டும். புளி வாசனை போய் புளிக்காச்சல் கெட்டியானதும் இறக்கிவைத்துவிடவும்.

இனிமேல்தான் புளியோதரை செய்யப்போகிறிர்கள்

அரிசி ---- 200 கிராம்.
நல்லெண்ணை --- அரைக்கரண்டி
முந்திரிப்பருப்பு ---4, வறுத்த நிலக்கடலை -----10


சாதத்தை உதிர் பதத்தில் வடித்துக்கொள்ளவும். சாதம் ஆறிய பின் ஒரு பெரிய பாத்திரத்
தில்சாதத்தைக்கொட்டி ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி அரைக் கரண்டி நல்லெண்ணை
வறுத்துவைத்துள்ளமுந்திரிப்பருப்பு நிலக்கடலை எல்லாவற்றையும் போட்டுக்கிளறவும்.
அத்துடன் வெந்தயப்பொடியின் மற்றப்பாதியையும் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது தேவையான அளவு புளிக்காச்சலைக் கொட்டிக் கிளறவும். நன்றாகக்
கிளறிக்கொண்டால் புளியோதரை ரெடியாகிவிடும்.
( முழுப்புளிக்காச்சலையும் சேர்த்துக்கொள்ளவேண்டாம் புளி கூடிவிடும் சாப்பிடமுடியா
மல்போய்விடும்- மிகுதியைப் பத்திரமாக வைத்துக்கொண்டால் வேறு தேவைக்குப்
பாவித்துக்கொள்ளலாம்)

Saturday, September 12, 2009

[ ஆண்களின் தாது புஷ்டியை மேம்படுத்தும் முறை ]

தாது புஷ்டி என்பது தாம்பத்திய உறவுக்குத்தேவையான ஆண்மையைப்
பெருக்குவதாகும்.
தாதுபுஷ்டியைப்பெருக்கும் வைத்தியமுறைக்குத்தேவையானவை:-
பாதாம் பருப்பு. 225 பருப்புகள்.
சுத்தமான தேன். 500 மில்லி லிற்றர்

இந்த வைத்தியமுறையைத்தொடங்குமுன்பு சுகபேதி அல்லது
ஏதாவது ஒரு Natural Laxatives எடுத்துக் குடலைச்சுத்தம் பண்ணிய
பின்பு இந்த முறையை ஆரம்பிக்க வேண்டும். இந்த வைத்திய முறை
யில் ஒவ்வொரு நாளும் இரவில் கீழே சொல்லப்பட்டஎண்ணிக்கையி
ல் பருப்புகளைச்சாப்பிட்டபின்பு மிளகு போட்டுக்காச்சிய பால் ஒரு
கப் எடுத்து இளஞ்சூட்டில் இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேன்
கலந்து குடிக்கவேண்டும்.

பாதாம்பருப்பு சாப்பிடவேண்டியமுறை:
முதலாம் நாள் ஒரு பருப்பு மட்டும் சாப்பிட்டு த் தேன் கலந்த பால்
குடிக்கவேண்டும்.
இரண்டாம் நாள் இரண்டு பருப்புகள் சாப்பிட்டுத் தேன் கலந்த பால்
குடிக்க்வேண்டும்.
மூன்றாம் நாள் மூன்று பருப்புகள் சாப்பிட்டுத் தேன் கலந்த பால்
குடிக்கவேண்டும்
இப்படியே 4ம் நாள் நான்கு பருப்புகள், 5ம் நாள் அய்ந்து பருப்புகள்,
6ம் நாள் ஆறு பருப்புகள், 7ம் நாள் ஏழுபருப்புகள், 8ம் நாள்
எட்டு பருப்புகள், 9ம் நாள் ஒன்பது பருப்புகள், 10ம் நாள் பத்துப்
பருப்புகள்,11ம் நாள் பதினொரு பருப்புகள், 12ம் நாள் பன்னிரண்டு
பருப்புகள்,13ம் நாள் பதின்மூன்று பருப்புகள், 14ம் நாள் பதினாங்கு
பருப்புகள் 15ம்நாள் பதிநைந்து பருப்புகள் சாப்பிட்டுத் தேன்கலந்த
பால் குடிக்கவேண்டும்.

16ம் நாளிலிருந்து ஒவ்வொரு பருப்பு குறைத்துச் சாப்பிடவேண்டும்.
16ம் நாள் 14 பருப்புகள், 17ம் நாள் 13 பருப்புகள், 18ம் நாள் 12 பருப்புகள்,
19ம் நாள் 11 பருப்புகள், 20ம் நாள் 10 பருப்புகள், 21ம் நாள் ஒன்பது பருப்புகள்,
22ம் நாள் எட்டு பருப்புகள், 23ம் நாள் ஏழு பருப்புகள், 24ம் நாள் ஆறு பருப்புகள்,
25ம் நாள் அய்ந்து பருப்புகள், 26ம் நாள் நான்கு பருப்புகள், 27ம் நாள் மூன்று
பருப்புகள்,28ம் நாள் இரண்டு பருப்புகள், 29ம் நாள் ஒரு பருப்பு
மட்டும் சாப்பிட்டு தேன்கலந்த பால் குடிக்கவேண்டும்.
30ம் நாள் தனிய தேன் கலந்த பால் குடிக்கவேண்டும்.

இந்த முறையில் சாப்பிட்டால் இதை ஒரு Course என்பார்கள். இப்படிச்
சாப்பிட்டு ஒரு வாரம் சென்ற பின்பு பலனை உ ணரமுடியும்.

இது பாட்டிவைதிய முறையாக இருந்தாலும் சித்த ஆயுர்வேத மருந்து
கள் சாப்பிடுங்காலங்களில் கடைப்பிடிக்க வேண்டுய பத்திய முறை
களான பாவற்காய் தவிர்த்தல், அதிக உஷ்ணம் அதிக குளிர்ச்சி கூடிய
உணவு வகைகள் தவிர்க்கப்படவேண்டும். மருந்து ஆரம்பித்தநாளிலி
ருந்து முடியும் நாள் வரை உடல் உறவு தவிர்க்கப்படவேண்டும்.பொதுவாக
தாதுவைப்பெருக்கும் மருந்துகள் சாப்பிடுங்காலங்களில் பிரமச்சாரியம்
என்று சொல்லப்படுகிற நிலை கண்டிப்பாககடைப்பிடிக்கப்படவேண்டும்.

மறுபடி இப்படி ஒரு Course எடுப்பது நலன் தரும் எனக்கருதினால் முதல்
Course முடிந்து 60 நாட்களின் பின்புதான் ஆரம்பிக்கவேண்டும்.

ஒரு சிலருக்கு பாதாம்பருப்பு சாப்பிட்டால் உடல் நிறை அதிகரிக்கும்
சாத்தியக்கூறு இருக்கிறது என்பதைக்கவனத்தில் கொள்ளவும். தரவிறக்கம்

Tuesday, September 8, 2009

வயது வந்த ஆண்களுக்கு மட்டும்

16 வயதுக்கு மேற்பட்ட சகல ஆண்களும் அவர் கள் அணியும்
உள் உடுப்பில் முக்கியகவனம் செலுத்தவேண்டும். Brief or
Boxer என் பதில் தெளிவு இருக்கவேண்டும்.இறுக்க மான Brief
அணிவதால் உயிர் அணு உற்பத்தி குறைவடைவதாக வைத்தி
ய ஆராச்சி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Brief விதைகளை
உடலுடன் சேர்த்து இறுக்கிப்பிடிப்பதால் உடல் வெப்பநிலை
விதைகளின் விந்து உற்பத்தியில் உயிர் அணுக்களின் உயிர்
வாழும் நிலையைப் பாதிப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள்.
Boxer அணியும் போது இந்நிலை தவிற்கப்படுகிறது.
Boxer விதைகளின் சுதந்திர செயல்பாட்டுக்கு வழிவிடுவதால்
பாதிப்பு தவிற்கப்படுகிறது. ஆதிகாலத்தில் கச்சை அல்லது
கோவணம் அல்லது கெளபீனம் அணியும் போது அவற்றை
நனைத்து ஈரமாக்கிய பின்பே அணியும்படி அறிவுறுத்தினார்கள்.
விதைகளை உடல் வெப்பம் தாக்காமல் இருக்கக்கூடிய உள்
உடுப்பு அணிவதுஆண்மையைப்பாது காக்கும் என்பது முக்கிய
விதியாகும்.

Saturday, August 15, 2009

[ நாட்பட்ட வறட்டு இருமல் ]

சிலபேருக்கு வரட்டு இருமல் தொடர்ந்து கொண்டே
இருக்கும். இவர்களுக்கு பாட்டி சொன்னவைத்தியம்
என்ன என்று பார்ப்போம்.

தேவையான மருந்துச்சரக்குகள்.

மல்லி ...... ஒரு கைய் சிறங்கை அளவு.
இஞ்சி...... ஒரு சின்னத்துண்டு
பனங்கற்கண்டு... ஒரு கைய் சிறங்கை அளவு

மல்லியை முதலில் சிறிது நொறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
இஞ்சியின் தோலை நீக்கி தட்டி ஒரு கப்பில் போட்டு வைத்துக்
கொள்ளுங்கள். அடுப்பில் தண்ணிரைக் கொதிக்க வையுங்கள்
தண்ணீர் நன்றாகக் கொதித்த தும் இஞ்சி தட்டிப்போட்ட கப்பி
னுள் மல்லி பனங்கற்கண்டு இரண்டையும் போட்டு கொதி நிலை
யிலுள்ள கொதிநீரை ஊற்றி மூடி வைத்துவிடுங்கள். நன்றாக
ஆறிய பின்பு அந்த கஷாயத்தை வடிகட்டி காலை, மாலை
மறு நாள் காலை என மூன்றே மூன்று வேளை சாப்பிடவும்.
அப்படிச்சாப்பிட்டால் இந்த நாட்பட்ட வறட்டு இருமல் காணாமல்
போய்விடும் என்று பாட்டி சொல்லியுள்ளார். நாங்களும்
முயற்சிப்போம் பயன் பெறுவோம்.

Friday, August 14, 2009

[மதுமேகம் என்னும் நீரழிவு நோய்]

பல நோய்கள் ஆங்கில வைத்தியத்திற்குக் கட்டுப்படுவதில்லை.
ஆனால் சில பாட்டி வைத்திய முறைகள் ஆச்சரியப்படும்படி
நோய்கள் முற்றாகக் குணமான சம்பவங்கள் ஏராளமாக இருக்
கின்றன.பெரும்பாலும் ஆங்கிலவைத்தியத்தில் எங்கள் மக்கள்
வைத்துள்ள நம்பிக்கையில் பத்துச்சதவீதங்கூட தமிழரின்
பண்டைய வைத்தியமான சித்தவைத்தியத்தில் வைப்பதில்லை.

அந்த சித்த வைத்தியத்தின் ஒரு துளிதான் எங்கள் பாட்டிமார்
கூறிய கை வைத்தியம்.

நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தப் பாட்டி சொல்லும் வைத்திய
முறையைப் பார்ப்போம்.

தேவையான மருந்துச்சரக்குகள்.

கோதுமைநொய்..............100 கிராம்
பார்லி அரிசி............... 100 கிராம்
கருஞ்சீரகம்............... 100 கிராம்
கருவேலம் பிசின்....... 100 கிராம்

இவை நான்கையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஏழு கப்
தண்ணீர் சேர்த்துக்கொண்டு நன்றாக எரியும் அடுப்பில்
ஏற்றி பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பதினோராவது
நிமிடம் அந்தக் கஷா யத்தை அடுப்பை விட்டு இறக்கி ஒரு
பக்கத்தில் வைத்துவிடவும்.
நன்றாக ஆறி குளிர்ச்சி யடைந்த கஷாயத்தை ஏழு பங்காகப்
பகிர்ந்து வைத்துக்கொள்ள்வும்
ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு
பங்கைச்சாப்பிடுவும்.ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்ட
பின்பு மறுபடியும் முன் போல் கஷாயத்தை தயாரிக்க
வேண்டும். இரண்டாவது தயாரித்த கஷாயத்தைமுன் போல்
எழு பங்காக்கி ஒன்றுவிட்டு ஒரு நாள் சாப்பிடவும்.

அதன் மேல் அந்த கஷாயம் சாப்பிடும் தேவைஏற்படாது என்பது
பாட்டி சொல்லும் வார்த்தையாகும். நாங்களும் முயன்று நோயைத்
தீர்ப்போமே.