Saturday, September 12, 2009

[ ஆண்களின் தாது புஷ்டியை மேம்படுத்தும் முறை ]

தாது புஷ்டி என்பது தாம்பத்திய உறவுக்குத்தேவையான ஆண்மையைப்
பெருக்குவதாகும்.
தாதுபுஷ்டியைப்பெருக்கும் வைத்தியமுறைக்குத்தேவையானவை:-
பாதாம் பருப்பு. 225 பருப்புகள்.
சுத்தமான தேன். 500 மில்லி லிற்றர்

இந்த வைத்தியமுறையைத்தொடங்குமுன்பு சுகபேதி அல்லது
ஏதாவது ஒரு Natural Laxatives எடுத்துக் குடலைச்சுத்தம் பண்ணிய
பின்பு இந்த முறையை ஆரம்பிக்க வேண்டும். இந்த வைத்திய முறை
யில் ஒவ்வொரு நாளும் இரவில் கீழே சொல்லப்பட்டஎண்ணிக்கையி
ல் பருப்புகளைச்சாப்பிட்டபின்பு மிளகு போட்டுக்காச்சிய பால் ஒரு
கப் எடுத்து இளஞ்சூட்டில் இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேன்
கலந்து குடிக்கவேண்டும்.

பாதாம்பருப்பு சாப்பிடவேண்டியமுறை:
முதலாம் நாள் ஒரு பருப்பு மட்டும் சாப்பிட்டு த் தேன் கலந்த பால்
குடிக்கவேண்டும்.
இரண்டாம் நாள் இரண்டு பருப்புகள் சாப்பிட்டுத் தேன் கலந்த பால்
குடிக்க்வேண்டும்.
மூன்றாம் நாள் மூன்று பருப்புகள் சாப்பிட்டுத் தேன் கலந்த பால்
குடிக்கவேண்டும்
இப்படியே 4ம் நாள் நான்கு பருப்புகள், 5ம் நாள் அய்ந்து பருப்புகள்,
6ம் நாள் ஆறு பருப்புகள், 7ம் நாள் ஏழுபருப்புகள், 8ம் நாள்
எட்டு பருப்புகள், 9ம் நாள் ஒன்பது பருப்புகள், 10ம் நாள் பத்துப்
பருப்புகள்,11ம் நாள் பதினொரு பருப்புகள், 12ம் நாள் பன்னிரண்டு
பருப்புகள்,13ம் நாள் பதின்மூன்று பருப்புகள், 14ம் நாள் பதினாங்கு
பருப்புகள் 15ம்நாள் பதிநைந்து பருப்புகள் சாப்பிட்டுத் தேன்கலந்த
பால் குடிக்கவேண்டும்.

16ம் நாளிலிருந்து ஒவ்வொரு பருப்பு குறைத்துச் சாப்பிடவேண்டும்.
16ம் நாள் 14 பருப்புகள், 17ம் நாள் 13 பருப்புகள், 18ம் நாள் 12 பருப்புகள்,
19ம் நாள் 11 பருப்புகள், 20ம் நாள் 10 பருப்புகள், 21ம் நாள் ஒன்பது பருப்புகள்,
22ம் நாள் எட்டு பருப்புகள், 23ம் நாள் ஏழு பருப்புகள், 24ம் நாள் ஆறு பருப்புகள்,
25ம் நாள் அய்ந்து பருப்புகள், 26ம் நாள் நான்கு பருப்புகள், 27ம் நாள் மூன்று
பருப்புகள்,28ம் நாள் இரண்டு பருப்புகள், 29ம் நாள் ஒரு பருப்பு
மட்டும் சாப்பிட்டு தேன்கலந்த பால் குடிக்கவேண்டும்.
30ம் நாள் தனிய தேன் கலந்த பால் குடிக்கவேண்டும்.

இந்த முறையில் சாப்பிட்டால் இதை ஒரு Course என்பார்கள். இப்படிச்
சாப்பிட்டு ஒரு வாரம் சென்ற பின்பு பலனை உ ணரமுடியும்.

இது பாட்டிவைதிய முறையாக இருந்தாலும் சித்த ஆயுர்வேத மருந்து
கள் சாப்பிடுங்காலங்களில் கடைப்பிடிக்க வேண்டுய பத்திய முறை
களான பாவற்காய் தவிர்த்தல், அதிக உஷ்ணம் அதிக குளிர்ச்சி கூடிய
உணவு வகைகள் தவிர்க்கப்படவேண்டும். மருந்து ஆரம்பித்தநாளிலி
ருந்து முடியும் நாள் வரை உடல் உறவு தவிர்க்கப்படவேண்டும்.பொதுவாக
தாதுவைப்பெருக்கும் மருந்துகள் சாப்பிடுங்காலங்களில் பிரமச்சாரியம்
என்று சொல்லப்படுகிற நிலை கண்டிப்பாககடைப்பிடிக்கப்படவேண்டும்.

மறுபடி இப்படி ஒரு Course எடுப்பது நலன் தரும் எனக்கருதினால் முதல்
Course முடிந்து 60 நாட்களின் பின்புதான் ஆரம்பிக்கவேண்டும்.

ஒரு சிலருக்கு பாதாம்பருப்பு சாப்பிட்டால் உடல் நிறை அதிகரிக்கும்
சாத்தியக்கூறு இருக்கிறது என்பதைக்கவனத்தில் கொள்ளவும். தரவிறக்கம்

2 comments:

Learn Speaking English said...

உங்கள் பிளாக் ஒரு நல்ல பிளாக்

M.Thevesh said...

Learn Speaking English said...

உங்கள் பிளாக் ஒரு நல்ல பிளாக

உங்கள் வருகைக்கு நன்றிகள்.

Post a Comment