Sunday, September 20, 2009

புளியோதரை என்னும் புளிச்சாதம் செய்யும் முறை

புளியோதரை செய்யும் முறை.

முதலில் வெந்தயப்பொடி செய்துவைத்துக்கொள்ளவும்.
செய்யும் முறை பின்வருமாறு.
வெந்தயம் .............. அரை ஸ்பூன்.
வற்றல் மிளகாய். .. மூன்று
உப்பு ..........தேவையான அளவு

ஒரு இருப்புச்சட்டியில் எண்ணை விடாமல் முதலில் வெந்தயத்தை
வறுத்துக்கொள்ளவும்.பின்பு அதே இருப்புச்சட்டியில் சிறிது எண்ணைவிட்டு
மூன்று வற்றல் மிளகாயை வறுத்துக்கொள்ளவும். அம்மியில்
வெந்தயம், வறுத்தெடுத்தமிளகாய் தேவையான அளவு ஸ்பூன் உப்பு சேர்த்து பொடியாக்கி
வைத்துக்கொள்ளவும்.


இப்போது புளிக்காச்சல் செய்து கொள்ளவேண்டும். செய்யும் முறை பின்வருமாறு.
தேவையான பொருட்கள்:
புளி ----ஒரு எலும்பிச்சம் பழம் அளவு.
உளுத்தம் பருப்பு ----- ஒரு ஸ்பூன்.,
கடலைப்பருப்பு-------ஒரு ஸ்பூன்,

வற்றல் மிளகாய்---- மூன்று,
கடுகு------கால் ஸ்பூன்,

பெருங்காயம் -- ---ஒரு சிறிய துண்டு.
உப்பு தேவையான அளவு

இப்போது புளியைக் கெட்டியாக கரைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு இருப்புச்சட்டியில்
அரைக்கரண்டி நல்லெண்ணை விட்டு எண்ணை காய்ந்ததும் கடுகு, கடலைபருப்பு,
உளுத்தம் பருப்பு , மிளகாய் வற்றல்மற்றும் பெருங்காயம் வறுத்துக்கொண்டு
தயாராக வைத்திருக்கும் கரைத்த புளியை இருப்புச்சட்டியில்கொட்டி கொதிக்கவிட
வேண்டும். கொதிக்க ஆரம்பித்த பின் முதலில் தயாரித்துவைத்திருக்கும்
வெந்தயப்பொடியில் அரை வாசிப்பொடியை கொதிக்கும் புளியில் போட்டு கொதிக்க
விடவும். தீயைக்குறைத்து சுமார் 20 தொடக்கம் 30 நிமிடங்கள் வரைகொதிக்க
வேண்டும். புளி வாசனை போய் புளிக்காச்சல் கெட்டியானதும் இறக்கிவைத்துவிடவும்.

இனிமேல்தான் புளியோதரை செய்யப்போகிறிர்கள்

அரிசி ---- 200 கிராம்.
நல்லெண்ணை --- அரைக்கரண்டி
முந்திரிப்பருப்பு ---4, வறுத்த நிலக்கடலை -----10


சாதத்தை உதிர் பதத்தில் வடித்துக்கொள்ளவும். சாதம் ஆறிய பின் ஒரு பெரிய பாத்திரத்
தில்சாதத்தைக்கொட்டி ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி அரைக் கரண்டி நல்லெண்ணை
வறுத்துவைத்துள்ளமுந்திரிப்பருப்பு நிலக்கடலை எல்லாவற்றையும் போட்டுக்கிளறவும்.
அத்துடன் வெந்தயப்பொடியின் மற்றப்பாதியையும் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது தேவையான அளவு புளிக்காச்சலைக் கொட்டிக் கிளறவும். நன்றாகக்
கிளறிக்கொண்டால் புளியோதரை ரெடியாகிவிடும்.
( முழுப்புளிக்காச்சலையும் சேர்த்துக்கொள்ளவேண்டாம் புளி கூடிவிடும் சாப்பிடமுடியா
மல்போய்விடும்- மிகுதியைப் பத்திரமாக வைத்துக்கொண்டால் வேறு தேவைக்குப்
பாவித்துக்கொள்ளலாம்)

Saturday, September 12, 2009

[ ஆண்களின் தாது புஷ்டியை மேம்படுத்தும் முறை ]

தாது புஷ்டி என்பது தாம்பத்திய உறவுக்குத்தேவையான ஆண்மையைப்
பெருக்குவதாகும்.
தாதுபுஷ்டியைப்பெருக்கும் வைத்தியமுறைக்குத்தேவையானவை:-
பாதாம் பருப்பு. 225 பருப்புகள்.
சுத்தமான தேன். 500 மில்லி லிற்றர்

இந்த வைத்தியமுறையைத்தொடங்குமுன்பு சுகபேதி அல்லது
ஏதாவது ஒரு Natural Laxatives எடுத்துக் குடலைச்சுத்தம் பண்ணிய
பின்பு இந்த முறையை ஆரம்பிக்க வேண்டும். இந்த வைத்திய முறை
யில் ஒவ்வொரு நாளும் இரவில் கீழே சொல்லப்பட்டஎண்ணிக்கையி
ல் பருப்புகளைச்சாப்பிட்டபின்பு மிளகு போட்டுக்காச்சிய பால் ஒரு
கப் எடுத்து இளஞ்சூட்டில் இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேன்
கலந்து குடிக்கவேண்டும்.

பாதாம்பருப்பு சாப்பிடவேண்டியமுறை:
முதலாம் நாள் ஒரு பருப்பு மட்டும் சாப்பிட்டு த் தேன் கலந்த பால்
குடிக்கவேண்டும்.
இரண்டாம் நாள் இரண்டு பருப்புகள் சாப்பிட்டுத் தேன் கலந்த பால்
குடிக்க்வேண்டும்.
மூன்றாம் நாள் மூன்று பருப்புகள் சாப்பிட்டுத் தேன் கலந்த பால்
குடிக்கவேண்டும்
இப்படியே 4ம் நாள் நான்கு பருப்புகள், 5ம் நாள் அய்ந்து பருப்புகள்,
6ம் நாள் ஆறு பருப்புகள், 7ம் நாள் ஏழுபருப்புகள், 8ம் நாள்
எட்டு பருப்புகள், 9ம் நாள் ஒன்பது பருப்புகள், 10ம் நாள் பத்துப்
பருப்புகள்,11ம் நாள் பதினொரு பருப்புகள், 12ம் நாள் பன்னிரண்டு
பருப்புகள்,13ம் நாள் பதின்மூன்று பருப்புகள், 14ம் நாள் பதினாங்கு
பருப்புகள் 15ம்நாள் பதிநைந்து பருப்புகள் சாப்பிட்டுத் தேன்கலந்த
பால் குடிக்கவேண்டும்.

16ம் நாளிலிருந்து ஒவ்வொரு பருப்பு குறைத்துச் சாப்பிடவேண்டும்.
16ம் நாள் 14 பருப்புகள், 17ம் நாள் 13 பருப்புகள், 18ம் நாள் 12 பருப்புகள்,
19ம் நாள் 11 பருப்புகள், 20ம் நாள் 10 பருப்புகள், 21ம் நாள் ஒன்பது பருப்புகள்,
22ம் நாள் எட்டு பருப்புகள், 23ம் நாள் ஏழு பருப்புகள், 24ம் நாள் ஆறு பருப்புகள்,
25ம் நாள் அய்ந்து பருப்புகள், 26ம் நாள் நான்கு பருப்புகள், 27ம் நாள் மூன்று
பருப்புகள்,28ம் நாள் இரண்டு பருப்புகள், 29ம் நாள் ஒரு பருப்பு
மட்டும் சாப்பிட்டு தேன்கலந்த பால் குடிக்கவேண்டும்.
30ம் நாள் தனிய தேன் கலந்த பால் குடிக்கவேண்டும்.

இந்த முறையில் சாப்பிட்டால் இதை ஒரு Course என்பார்கள். இப்படிச்
சாப்பிட்டு ஒரு வாரம் சென்ற பின்பு பலனை உ ணரமுடியும்.

இது பாட்டிவைதிய முறையாக இருந்தாலும் சித்த ஆயுர்வேத மருந்து
கள் சாப்பிடுங்காலங்களில் கடைப்பிடிக்க வேண்டுய பத்திய முறை
களான பாவற்காய் தவிர்த்தல், அதிக உஷ்ணம் அதிக குளிர்ச்சி கூடிய
உணவு வகைகள் தவிர்க்கப்படவேண்டும். மருந்து ஆரம்பித்தநாளிலி
ருந்து முடியும் நாள் வரை உடல் உறவு தவிர்க்கப்படவேண்டும்.பொதுவாக
தாதுவைப்பெருக்கும் மருந்துகள் சாப்பிடுங்காலங்களில் பிரமச்சாரியம்
என்று சொல்லப்படுகிற நிலை கண்டிப்பாககடைப்பிடிக்கப்படவேண்டும்.

மறுபடி இப்படி ஒரு Course எடுப்பது நலன் தரும் எனக்கருதினால் முதல்
Course முடிந்து 60 நாட்களின் பின்புதான் ஆரம்பிக்கவேண்டும்.

ஒரு சிலருக்கு பாதாம்பருப்பு சாப்பிட்டால் உடல் நிறை அதிகரிக்கும்
சாத்தியக்கூறு இருக்கிறது என்பதைக்கவனத்தில் கொள்ளவும். தரவிறக்கம்

Tuesday, September 8, 2009

வயது வந்த ஆண்களுக்கு மட்டும்

16 வயதுக்கு மேற்பட்ட சகல ஆண்களும் அவர் கள் அணியும்
உள் உடுப்பில் முக்கியகவனம் செலுத்தவேண்டும். Brief or
Boxer என் பதில் தெளிவு இருக்கவேண்டும்.இறுக்க மான Brief
அணிவதால் உயிர் அணு உற்பத்தி குறைவடைவதாக வைத்தி
ய ஆராச்சி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Brief விதைகளை
உடலுடன் சேர்த்து இறுக்கிப்பிடிப்பதால் உடல் வெப்பநிலை
விதைகளின் விந்து உற்பத்தியில் உயிர் அணுக்களின் உயிர்
வாழும் நிலையைப் பாதிப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள்.
Boxer அணியும் போது இந்நிலை தவிற்கப்படுகிறது.
Boxer விதைகளின் சுதந்திர செயல்பாட்டுக்கு வழிவிடுவதால்
பாதிப்பு தவிற்கப்படுகிறது. ஆதிகாலத்தில் கச்சை அல்லது
கோவணம் அல்லது கெளபீனம் அணியும் போது அவற்றை
நனைத்து ஈரமாக்கிய பின்பே அணியும்படி அறிவுறுத்தினார்கள்.
விதைகளை உடல் வெப்பம் தாக்காமல் இருக்கக்கூடிய உள்
உடுப்பு அணிவதுஆண்மையைப்பாது காக்கும் என்பது முக்கிய
விதியாகும்.