Thursday, November 19, 2009

கீரையும் அதன் மருத்துவக்குணங்களும்

ஏழைகளின் சொத்து என்று சொல்லப்படும் கீரை
விலை மலிவான சாதாரணப்பொருட்களிலும்
நிறையப்பலன்கள் பெறமுடியும் என்பதற்கு ஓர்
எடுத்துக்காட்டாகும். சில முக்கியகீரைகளின்
பலன்கள் பின்வருமாறு:

அரைக்கீரை: தினமும் உண்ணக்கூடியகீரை
வகைகளில் இது முதன்மையானது. எல்லா
நோயாளிகளும் உண்ணக்கூடியது.கண் பார்
வைச்சிறப்பாகவைத்திருபதற்கு இந்தக்கீரை
பயன்படுகிறது.இரத்தநாளங்கள், ஜீரண உறுப்
புகளை நல்லநிலையில் பாதுகாப்பாகவைத்
திருக்க இது ஒரு சிறந்தகீரை. பிரசவமான
மகளிருக்கு உடனடியான் ஊட்டம் அளிக்கும்
வல்லமை இந்தக்கீரைக்கு இருக்கிறது.

மணத்தக்காளிக்கீரை: வாயில் ஏற்பட்ட புண்,
வயிற்றுப்புண் முதலியவற்றிக்கு கண்கண்ட
சஞ்சீவி என்று இக்கிரையைக்கூறுவார்கள்.
மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல்
வளம் பெருகும். அல்சர் என்கின்ற நோய்க்கு
அற்புத மருந்தாகும். வாரம் இரு முறை உண்
ணக்கூடியகீரைகளில் இதுவும் ஒன்று.

பசளைக்கீரை: மலச்சிக்கலை விரட்டுவதில்
வல்லது.ஆண்மையைப்பலப்படுத்தும் , குளிர்ச்
சிதரும் கீரைகளில் இதுவும் ஒன்று. ஆனால்
ஆஸ்துமா போன்றநொய் உள்ளவர்கள் இக்
கீரையைக்கோடை காலத்தில் மட்டுமே
உண்ணவும்.

வெந்தியக்கீரை: இதில் புரதம், தாதுக்கள்,
மற்றும் விட்டமின் சி முதலியன் அபரித
மாக இருக்கிறது.வாயுவைக்கண்டிக்கும்
கல்லீரலைச்சுறுசுறுப்பாக்கும். வாரம்
ஒருமுறை இக்கீரையை உண்டுவர
மூட்டுவலி,இடுப்புவலி போன்றவை
நீங்கும்.சிறுநீர்கோளாறு கிட்டவே வராது.

முளைக்கீரை: இக்கீரை எல்லா வயதினரும்
தினம் சாப்பிடக்கூடியது. பசி இல்லாதவற்கு
பசியைத்தூண்டக்கூடிய கீரை. காசநோயின்
போதுவரும் காச்சலைக்கட்டுப்படுத்தக்கூடியது.

அகத்திக்கீரை: இதில் வைட்டமின், இரும்புச்
சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்தது. விஷங்க
ளை முறிக்கும். கண் பார்வை சம்பந்தப்பட்ட
நரம்புகளுக்கு வலுவூட்டக்கூடியது. வயிற்றில்
உள்ளகிருமிகளைக் கொல்லக்கூடியது. ஆனால்
வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள் வயோதிகர்
உண்ணக்கூடாது. மாதத்தில் ஒரு முறை மட்டும்
உண்ணத்தக்கது.

கரிசலாங்கண்ணி கீரை: இக்கீரை முதுமைத்தோற்
றத்தைக்கட்டுப்படுத்தும். கண் பார்வை கூர்மை
யடையும்.பல் நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது.
இரைப்பையை வலுப்படுத்துவதில் சிறந்தது.

புளியாரைக்கீரை: காயகல்பத்திற்கு இணையானது
என வள்ளலாரால் பேசப்பட்டது. கபம், பித்தவாயுவை
கண்டிக்கும் ஆற்றல் பெற்றது. மூலநோய்க்கும் நாட்
பட்ட கிராணிக்கு இது மாமருந்தாகிறது.


No comments:

Post a Comment