Saturday, October 3, 2009

அவரையின் மருத்துவக்குணம்

கொடிவகைகாய்களில் சிறந்தது அவரைக்காயாகும்.
சிக்கனமானவிலையில் நிறைந்த ஊட்டச்சத்தை இந்த
அவரைக்காய் தருகிறது.

இதில் சுண்ணாம்புச்சத்து,இரும்புச்சத்து, புரதச்சத்து
மற்றும் சில விட்டமின் சத்துகளும் ஒரே இடத்தில்
கிடைக்கும் காய் அவரைக்காயாகும். இதில் பிஞ்சுக்
காயே சிறந்ததாகும்.மிகஎளிதில் செமிக்கக்கூடிய
காய்களில் அவரையும்ஒன்று. அதனால் பலவீனமான
குடல் உள்ளவர்களும்மத்தியான நேரத்திலும் இரவு
நேரத்திலும் இதை உண்ணலாம்.

வெண்மையான அவரைகாய் வாயுவையும் பித்தத்தை
யும் கண்டிக்கவல்லது. இது உள்ளுறுப்புகளின் அளர்ச்சி
யையும் எரிச்சலையும் போக்கும் தன்மை உள்ளது.இதை
உணவில் சேர்த்து உண்பதால் நீரழிவு நோய், பேதியாகும்
தொல்லை, அடிக்கடி தலைநோய் வருதல், ஜீரணம் சம்பந்
தப்பட்ட கோளாறு முதலியவற்றைக்கட்டுப்படுத்தும்
என்று வைத்தியநூல்கள் கூறுகின்றன.

அண்மைய ஆராச்சிகளின்படி இரத்தக்கொதிப்பைக் கட்
டுப்படுத்தும் சக்தி அவரைக்காய்க்கு உண்டு என்று கண்
டுபிடித்துள்ளார்கள்.

2 comments:

பின்னோக்கி said...

என் அம்மா அவரைக்காய் இருதயத்துக்கு நல்லது எனக் கூறி என்னை சாப்பிட வைப்பார்கள். உண்மையாகவா ? தெரியவில்லை.

M.Thevesh said...

பின்னோக்கி said...

என் அம்மா அவரைக்காய் இருதயத்துக்கு நல்லது எனக் கூறி என்னை சாப்பிட வைப்பார்கள். உண்மையாகவா ? தெரியவில்லை.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment