Saturday, October 31, 2009

அச்சுவலைச்சந்திப்பு பற்றியது

அன்பின் பதிவர்கள்,

இந்த அச்சு வலைச் சந்திப்பும் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. இந்தச் சுட்டிக்குச் சென்றால் அந்நேரடி ஒளிபரப்பினை திங்கள் 3 மணியிருந்து பார்க்கமுடியும் ( நேரடி ஒளிபரப்பு எண்டால் அப்பதான செய்ய முடியும் :))


இயலுமெனில் உங்கள் வலைகளிலும் இச்சுட்டியுடன் கூடிய நேரடி ஒளிபரப்பு விபரத்தை தெரிவித்துவிடுங்கள்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ. (Aka) கௌபாய்மது

[ தக்காளிச்சாதம் ]

தக்காளிச்சாதம் செய்யத்தேவையான பொருட்கள்.

ஆரிசி.-------- 100 கிராம்
தக்காளிப்பழம். 2 பெரியது
வெண்காயம். 1 பெரியது
பச்சைமிளகாய் . 2
கடுகு. கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு. அரை ஸ்பூன்
வெந்தயம். அரை ஸ்பூன்
சாம்பார் பொடி. அரை ஸ்பூன்

சாதத்தை உதிராக வடித்துக்கொள்ளவும்.வெண்கா
யத்தயும் மிளகாயையும் பொடிப்பொடியாக நறுக்கொள்
ளவும்.தக்காளிப்பழத்தையும் துண்டுகளாக நறுக்கி வைத்
துக்கொள்ளவும்.வெறும் இருப்புச்சட்டியில் வெந்தயத்தை
வறுத்து எடுத்துக்கொண்டு அம்மியில் உப்பு சேர்த்து பொடி
செய்து வைத்துக்கொள்ளவும்.

இருப்புச்சட்டியில் மூன்று ஸ்பூன் எண்ணை விட்டு கடுகு,
உளுத்தம்பருப்பு வறுத்துக்கொண்டு பொடிப்பொடியாக நறுக்
கி வைத்துள்ள வெண்காயம் , பச்சைமிளகாயையும் போட்டு
நன்றாக வதக்கவும். இவை வதங்கியதும் நறுக்கிவைத்துள்
ள தக்களிப்பழத்தைப் போட்டு அரை ஸ்பூன் சாம்பார் பொடியை
யும் சேர்த்து வதக்கவும். வதங்கியபின் முன்பே வடித்து வைத்
துள்ள சாதத்தில் கொட்டி வெந்தயப்பொடியையும் கொட்டி நன்றா
கக்கிளறவும். எல்லாம் ஒன்றுசேர்ந்துவிட்டால் இப்போது டெமே
டோ பாத் என்கின்ற தக்காளிச்சாதம் ரெடியாகிவிட்டது.

Friday, October 9, 2009

சீரகத்தின் மருத்துவக்குணம்

பலர் நினைப்பது போல் சீரகம் உணவில் வாசத்திற்
காக சேர்க்கப்படுவதில்லை. 25 ம்கும் மேற்பட்ட
நோய்களைத்தீர்க்க சீரகம் பயன்படுத்தப்படுகிறது.

சீரகத்தில் ஏழு வகைச்சீரகம் உண்டு. அவையாவன
நற்சீரகம், பெருஞ்சீரகம்,கருஞ்சீரகம், காட்டுச்சீரகம்,
பிலப்புச்சீரகம், நட்சத்திரச்சீரகம், செஞ்சீரகம் எனப்
படும்.

இதில் பெருஞ்சீரகமும் நற்சீரகமும் மட்டுமே
எங்கள் உணவுப் பதார்த்தங்களில் பயன்படுத்
தப்படுகின்றன.

முக்கியமாக கீழ் வருபனவற்றைச்சீரகம் குண
மாக்குகிறது.வாய் நாற்றத்தைப்போக்கும், வாய்ப்
புண் குணமகும், தொண்டைக்கட்டு நீங்கும்,
நாக்குத்தடிப்பு நீங்கும், வாய் ஊறல் நிவர்த்தி
யாகும், இருமல் குறையும்,மார்புவலி குறை
யும், மூச்சுத்திணறல் நீங்கும்,மலக்கட்டு எடுப
டும்,ஜீரணம் ஒழுங்காகும்,வயற்றுவலி நீங்கும்,
சூதக வலி நீங்கும், சீதா பேதி குணமாகும்,பல் வலி
குறையும், எலும்பு பலமடையும்,உடல் வறட்சியை
போக்கும், வியர்வை நாற்றத்தைப்போக்கும், வாந்தி
குமட்டலை நீக்கும்,பித்தமயக்கம், ஜுரம் தணியும்.

கருஞ்சீரகம் நீரழிவு நோயைக்கட்டுப்படுத்தும் மருந்
துகளில் சேர்க்கப்படுகிறது.

மூத்திர எரிச்சலுக்கும் குளிர்ச்சிக்கும் கீழ்கண்ட முறை
யில் இந்தக்குடிநீரை ஒவ்வொருநாளும் தயாரித்துக்
குடிக்கவும்.

நாலு லிட்டர் தண்ணீரை நன்றாகக்கொதிக்கவைத்து
வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வடிகட்டிஎடுத்த கொ
திநீரில் 50 கிராம் சீரகத்தைப்போட்டு மீண்டும் கொதிக்
கவைத்து இறக்கி வைத்துவிடவும். இந்த நீரையே குடி
நீராக எப்போதும் பயன்படுத்திவந்தால் மேலே சொல்
லிய பலன்களில் பலவற்றைப்பெறலாம்.

சிறப்பாக மூத்திர எரிச்சலையும் ஜீரணம் இன்மையை
யும் இந்தக்குடிநீர் பூர்ணமாகக் குணமாக்கும்.

100 கிராம் சீரகம் எடுத்துக்கொண்டால் அதில் கீழ்கண்
ட விகிதாசாரத்தில் சத்துக்கள் இருக்கின்றன.

புரதம். 18.7 கி
கொழுப்பு 15.0 கி
தாது உப்பு 5.8 கி
கார்போஹைரேட் 36.6 கி
சுண்ணாம்பு 511 மில்லி கிராம்
இரும்பு 310 மில்லிகிராம்
கரோட்டின் 522 மில்லிகிராம்
நையசின் 2.6 மில்லிகிராம்
விட்டமின் சி 3.0 மில்லிகிராம்.


சீரகம் எங்கள் சமையலில் பங்குபற்றினாலும்
இது ஒரு மருந்துச்சரக்கு என்பதைத்தெரிந்து
கொள்ளுங்கள்.


Wednesday, October 7, 2009

கருவேப்பிலைக்குழம்பு

கருவேப்பிலைக்குழம்பு செய்யத்தேவையானவை.
புளி ------ ஒரு எலுமிச்சம்பழம் அளவு.
வற்றல் மிளகாய். ---- 5 (அய்ந்து)
உளுத்தம்பருப்பு. 1 1/2 ஸ்பூன்(ஒன்றரை)
கடுகு. ------- அரை ஸ்பூன்
உப்பு. ---------- 1 1/2 ஸ்பூன்(ஒன்றரை)
பெருங்காயம். ---- ஒரு துண்டு
கருவேப்பிலை (உதிர்த்தது) -- 2 கரண்டி

செய்யும் முறை:

முதலில் இருப்புச்சட்டியில் சிறிது எண்ணை
சேர்த்து உளுத்தம்பருப்பு, வற்றல் மிளகாய்,
பெருங்காயத்தை வறுத்து எடுத்துக்கொண்டு
அவற்றுடன் புளி, உப்பு, கருவேப்பிலை (பச்சை
யாக) அம்மியில் வைத்து நன்றாகஅரைத்து
விழுதாக எடுத்து ,குழம்பாக ஜலம் விட்டுக்
கரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு
அடுப்பில்வைத்து பச்சை வாசனை போக கொதிக்
கவிடவும். கொதித்தபின்பு கடுகு பொரித்துக்
கொட்டி இறக்கிவைக்கவும். இப்போது கருவேப்
பிலைக் குழம்பு ரெடி.

Tuesday, October 6, 2009

கருவேப்பிலையின் மகத்துவம்

கருவேப்பிலை என்பது பதார்த்தங்களிலிருந்து
தூக்கி வீசுவதர்க்காகப் போடப்படுவதில்லை.கரு
வேப்பில்லையின் சத்து நம் உடலில் சேரவேண்
டும் என்பதர்காகவே எல்லப்பதார்த்தத்திலும்
போடுகிறார்கள் ஆகையால் தூக்கி எறியாது
சாப்பிடுங்கள்.

கருவேப்பிலையைச்சாப்பிட்டால் புரதம், இரும்
புச்சத்து, சுண்ணாம்புச்சத்து,பாஸ்பரஸ், கார்போ
ஹைட்ரேட், கொளுப்பு, விட்டமின் ஏ, விட்டமின்
சீ முத்லியன உடலில் சேர்கின்றன.

கருவேப்பிலை சாப்பிட்டால் கண் பார்வைக்கோ
ளாறு உங்களை அணுகாது. எலும்புகள் பலப்படும்
சோகை நோய் வரப்பயப்படும்.

ஊரில் தொற்று நோய்ப் பரவல் இருந்தாலும் கரு
வேப்பிலை சாப்பிட்டால் அது எம்மைத்தொற்றாது.
புண்கள் விரைவில் ஆற கருவேப்பிலை உதவுகிறது.
அதுவும் வாய்ப்புண் உள்ளவர்கள் கருவேப்பிலை
சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும்.

வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளைப்போக்கும்
குணம் கருவேப்பிலைக்குண்டு. மலச்சிக்கலைப்
போக்கும், ஜீரணசக்தியைக்கூட்டும், பேதியைக்
கட்டுப்படுத்தும். பித்தத்தைக்கட்டுப்படுத்தி வாந்தி
யைத்தடுத்து வயிற்றில் ஏற்படும் வயிற்று இரச்ச
லைத்தடுக்கும்

தலைமுடி கரு கருவென வளரவும் கண்களுக்கு
ஒளி தரவும், சுக்கிலம் (Sperm) விருத்தி அடைய
வும் கருவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்து உத
வி செய்கிறது

முகத்தில் ஏற்பட்ட அம்மைத்தளும்பை நீக்க
கருவேப்பிலை- ஒரு பிடி, கசகசா-- ஒருகரண்டி
கஸ்தூரிமஞ்சள்.--ஒரு துண்டு
இவைமூன்றையும் அம்மியில் வைத்து அரைத்து
அந்த விழுதை முகத்தில் தடவி( பற்றுப்போடுவது
போல்) 30 நிமிடம் ஊறியபின் குளிர்ந்த தண்ணீரி
னால் கழுவி விடுங்கள். இப்படி 15 நாட்கள் செய்து
வர தளும்புகள் மறைந்துவிடும்.

பசிஎடுக்கவிலலையா? சாப்பாடு செமியாமல்
கஷ்டப்படுகிறீர்களா, கருவேப்பிலையை வறுத்
து அதனுடன் மிளகு,சீரகம், சுக்கு சேர்த்து பொடி
செய்து கொண்டு உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்
து சாப்பிடுங்கள். பசி அசிரவேகத்தில் கிளர்த்து
எழும்பும் நீங்களும் கொண்டுவா கொண்டுவா
பசி தாங்கமுடியவில்லையே என்று கேட்பீர்கள்.

எள்ளோதரை என்கின்ற எள் சாதம்

எள் சாதம் செய்யத்தேவையான பொருட்கள்.
அரிசி. --------- 200 கிராம்
நல்லெண்ணை.--- 4 ஸ்பூன்
உழுத்தம்பருப்பு. -- 1 கரண்டி
வற்றல் மிளகாய். 4
எள். -----------1 கரண்டி
உப்பு. --------- அரை ஸ்பூன்
பெருங்காயம். --- சிறு துண்டு.

முதலில் எள்ளுப்பொடி செய்துகொள்ளவேண்டும்.
செய்முறை:-
இருப்புச்சட்டியில் எண்ணை சேர்க்காமல் முத
லில் எள்ளை வறுத்து தனியாக வைத்துக்கொள்ள
வும். பின்பு அந்த இருப்புச்சட்டியில் சிறிது எண்ணை
சேர்த்துக்கொண்டு உழுத்தம்பருப்பு, வற்றல் மிளகாய்,
பெருங்காயம் முதலியவற்றை வறுத்துக்கொள்ளவும்.
வறுத்தெடுத்த பொருட்களை எள் சேர்க்காமல் உப்பு
சேர்துக்கொண்டு அம்மியில் வைத்துப்பொடி செய்து
கொண்டபின்பு எள்ளையும் அதனுடன் சேர்த்து பொ
டிசெய்து கொள்ளவும்.

சாதத்தை உதிரிப்பதமாக வடித்துக்கொள்ளவும். பின்பு
அந்த சாதத்தில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணையை
ஊற்றி நன்கு உதிர்த்துக்கொண்டு எள்ளுப்பொடியைச்
சேர்த்துக்கொண்டு மிகுதி நல்லெண்ணையையும்
சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் கடைசியில்
கருவேப்பிலையச்சேர்த்துக்கொள்ளவும். இப்போது
எள் சாதம் தயாராகிவிட்டது.

Sunday, October 4, 2009

எள்ளின் மருத்துவக்குணம்

நீங்கள் உங்கள் உடல் பருமன் குறையவேண்டும் அதாவது
உடல் இளைக்கவேண்டும் என்றாலும் அல்லது மெலிந்த
உடல் பருக்கவேண்டும் என்றாலும் கீழ் கண்டமுறையில்
எள்ளைச்சாப்பிட்டால் நீங்கள் விரும்பிய பலனைப்பெறலாம்.

கலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காப்பி அல்லது
தேநீர் குடியாமல் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று
தண்ணீர் குடிக்கவேண்டும். (3) மூன்று மணி நேரம் வேறு
எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். இப்படிச்சாப்பிட்
டால் ஒரு மாதத்தில் பலன் தெரியும்.

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் (மூத்திரம்) கழிக்கும்
பழக்கத்தை நிற்ப்பாட்ட இரவில் வெண்முள்ளங்கியுடன்
எள் சேர்த்துச்சாப்பிடக்கொடுத்து வர அந்தப்பழக்கம் இல்
லாமல் போய்விடும்.

மூலநோயால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபடக்
கீழே சொல்லியபிரகாரம் எள் வைத்தியம் செய்தால் குண
மாகும்.
எள். ----------- 5 கிராம்
ஆட்டுப்பால். 5 கிராம்
சர்க்கரை. . 5 கிராம்

எள்ளை விழுதாக்கிக்கொண்டு அதனுடன்ஆட்டுப்பாலும்
சர்க்கரையும் சேர்த்து ஒன்றாகக்கரைத்து க் குடித்து வந்
தால் பலன் தெரியும்.

பற்க்கள் பலவீனமாக இருந்தால் அதை நிவர்த்தி செய்ய
தினமும் காலையில் ஒரு கைபிடி எள் சாப்பிட்டு வந்தால்
பற்க்களின் பலவீனம் நீங்கி பல் பலப்படும் அதனால் பற்க்
களின் வீழ்ச்சியைத்தடுத்து நிறுத்தலாம்.

தொழுநோய் குணமாக எள்ளைக்கீழ் கண்டமுறையில்
சாப்பிட்டு வரப்பலன் கிடைக்கும்

எள் ------- ------ 5 கிராம்
உப்பு ------------ 5 கிராம்
மிளகாய் ------ 5 கிராம்

மூன்றையும் லேசாக வறுத்து இடித்து பின் அதைச்சலித்து
எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

காலை மாலை இரு வேளையும் இரண்டு சிட்டிகை அளவு
பொடியை அரைத்தேக்கரண்டி பசு நெய்யில் குழைத்துச்
சாப்பிடவேண்டும். இப்படி 21 நாட்கள் உண்டு வந்தால் பலன்
தெரியும். மருந்து என்று சாப்பிடுங்காலங்களில் பாவற்காய்
சாப்பிடுவதைத்தவிர்க்கவேண்டும்.


Saturday, October 3, 2009

அவரையின் மருத்துவக்குணம்

கொடிவகைகாய்களில் சிறந்தது அவரைக்காயாகும்.
சிக்கனமானவிலையில் நிறைந்த ஊட்டச்சத்தை இந்த
அவரைக்காய் தருகிறது.

இதில் சுண்ணாம்புச்சத்து,இரும்புச்சத்து, புரதச்சத்து
மற்றும் சில விட்டமின் சத்துகளும் ஒரே இடத்தில்
கிடைக்கும் காய் அவரைக்காயாகும். இதில் பிஞ்சுக்
காயே சிறந்ததாகும்.மிகஎளிதில் செமிக்கக்கூடிய
காய்களில் அவரையும்ஒன்று. அதனால் பலவீனமான
குடல் உள்ளவர்களும்மத்தியான நேரத்திலும் இரவு
நேரத்திலும் இதை உண்ணலாம்.

வெண்மையான அவரைகாய் வாயுவையும் பித்தத்தை
யும் கண்டிக்கவல்லது. இது உள்ளுறுப்புகளின் அளர்ச்சி
யையும் எரிச்சலையும் போக்கும் தன்மை உள்ளது.இதை
உணவில் சேர்த்து உண்பதால் நீரழிவு நோய், பேதியாகும்
தொல்லை, அடிக்கடி தலைநோய் வருதல், ஜீரணம் சம்பந்
தப்பட்ட கோளாறு முதலியவற்றைக்கட்டுப்படுத்தும்
என்று வைத்தியநூல்கள் கூறுகின்றன.

அண்மைய ஆராச்சிகளின்படி இரத்தக்கொதிப்பைக் கட்
டுப்படுத்தும் சக்தி அவரைக்காய்க்கு உண்டு என்று கண்
டுபிடித்துள்ளார்கள்.

Friday, October 2, 2009

எலுமிச்சம்பழச்சாதம்

எலுமிச்சம்பழச்சாதம் செய்யத்தேவையான பொருட்கள்.

அரிசி. ------------------ 150 கிராம்
எலுமிச்சம்பழம்.---- ஒன்று (1)
கடுகு. ------------------ அரை ஸ்பூன்.
கடலைப்பருப்பு.----- அரை ஸ்பூன்.
உளுத்தம்ப்ருப்பு. --- அரை ஸ்பூன்
வெந்தயம். ----------- அரை ஸ்பூன்.
வற்றல் மிளகாய். -- ஆறு (6)
பெருங்காயம். சின்னத்துண்டு.
முந்திரிப்பருப்பு. ----- ஆறு (6)
உப்பு. --------------------- தேவையான அளவு
நல்லெண்ணை .------ தேவைக்கேற்ற அளவு


சாதத்தை உதிராக வடித்துக்கொள்ளவும். ஒரு அகன்ற
பாத்திரத்தில் உதிராக வடித்த சாதத்தைக் கொட்டி ஆற
வைக்கவும். அதன் மீது ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை
யும் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணை யையும் விட்டு நன்
றாகக்கிளறி ஆறவைக்கவும்.

ஒரு இருப்புச்சட்டியில் எண்ணை சேர்க்காமல் வெந்தயத்தை
வறுத்து எடுத்துக்கொண்டு. அதே சட்டியில் சிறிது எண்ணை
விட்டு இரண்டு வற்றல் மிளகாயை வறுத்து எடுத்துக்கொள்
ளவும். வறுத்தெடுத்த வெந்தயம், மிளகாயுடன் அளவான
உப்பும் சேர்த்து அம்மியில் பொடி செய்து சாதத்தில் தூவவும்.

இருப்புச்சட்டியில் சிறிது எண்ணை சேர்த்துக்கொண்டு சிறிது
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இரண்டாகக்கிள்ளிய
வற்றல் மிளகாய், முந்திரிப்பருப்பு மற்றும் பெருங்காயத்தை
யும் சேர்த்து வறுத்து எடுத்து சாதத்தில் கொட்டவும். எலுமிச்
சம்பழத்தைப்பிழிந்து சாறு எடுத்து அதையும் சாதத்தில் கொட்டி
கருவெப்பிலை யும் சேர்த்து நன்றாகக்கிளறி கொள்ளவும்.

எல்லாம்ஒன்றாகச் சேர்ந்த பின்பு வேறு பாத்திரத்தில் எடுத்து
வைத்துக்கொள்ளவும். இப்போது லெமன் ரைஸ் என்கின்ற
எலுமிச்சம்பழச்சாதம்ரெடியாகிவிட்டது.